கேள்வி: நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?
பதில்: உண்மைக்கிறிஸ்தவர்கள் ஈசா/இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஆவர். குரானில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற படியால், உண்மையான முஸ்லீம்கள் ஈசாவின் போதனைகளைக் கற்று அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும் (சூரா3:48- 49; 5:46). ஈசாவைக் குறித்து குரான் சொல்வது என்ன?
# அல்லா ஈசாவை அனுப்பி, பரிசுத்த ஆவியினால் அவருக்கு உதவி செய்தார்(சூரா.2:87)
# ஈசாவை அல்லா உயர்த்தினார் (சூரா 2:253)
# ஈசா நீதிமானாகவும் மற்றும் பாவமில்லாதவராகவும் இருந்தார்(சூரா 3:46; 6:85; 19:19)
# ஈசா மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் (சூரா 19:33௩4)
# ஒரு மதத்தை ஸ்தாபிக்கும்படி ஈசாவுக்கு அல்லா கட்டளையிட்டார் (சூரா 42:13)
# ஈசா பரலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) ஏறிச் சென்றார்( சூரா 4:157௧58)
வேதாகமம் - இயேசுவின் வார்த்தை
ஈசாவின் சீடர்களால் இஞ்சிலில்( நற்செய்தி நூல்) அவருடைய போதனைகள் எழுதிவைக்கப் பட்டுள்ளது.ஈசா மற்றும் அவருடைய செய்தியில் நம்பிக்கை வைக்கும்படிக்கு அல்லாவினால் சீடர்கள் ஏவப்பட்டனர் என்று சூரா 5:111 குறிப்பிடுகிறது. அல்லாவின் உதவியாளர்களாக (சூரா 61:6,14), ஈசாவின் சீடர்கள் அவருடைய போதனைகளை துல்லியமாக பதிவுசெய்திருப்பர்.
தோரா(Torah) மற்றும் இன்ஜிலையும் (Gospels) நிலைநிறுத்தி அவ்விரண்டிற்கும் கீழ்படிய வேண்டுமென்றும் குர்ஆன் முஸ்லீம்களுக்கு போதிக்கிறகிறது (சூரா 5:44௪8).
நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்குமானால், முகமதுவுக்கு இந்தப் போதனை வழங்கப் பட்டிருக்காது. ஆகவே, முகமதுவின் காலத்தில் இருந்த நற்செய்தி நூல்களின் பிரதிகள் நம்பத்தக்கவையாகவும் துல்லியமானவையாகவும் இருந்தன.
முகமது வாழ்ந்த காலத்துக்கும் 450 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் உள்ள நற்செய்தி நூல் பிரதிகள் உள்ளன. மிகவும் பழமையான பிரதிகள், முகமதுவின் காலத்தில் உள்ள பிரதிகள் மற்றும் முகமதுவின் காலத்துக்கு பிந்தினவையாக குறிக்கப்பட்டிருக்கும் கைப்பிரதிகள் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும் போது , நற்செய்தி நூல்களின் அனைத்துப் பிரதிகளும் இயேசு மற்றும் அவருடைய போதனை குறித்த தங்கள் சாட்சியில் முரñபாடற்றவையாக இருக்கின்றன.
நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்கின்றன என்று எந்தச் சான்றும் நிரூபிக்க முடியாது. ஆகவே, இயேசுவின் எல்லா போதனைகளும் வேதாகமத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
v இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்
நற்செய்தி நூல்கள் உண்மை என்று அறிந்து கொள்ளுதல் போன்ற காரியங்கள் இயேசுவைக் குறித்து என்ன போதிக்கின்றன? இயேசு தான் கொலை செய்யப்பட்டு, மரித்து பின்பு மரித்தோரிலிருந்து எழும்புவேன் என்று கூறி தனது வாழ்வு நிகழ்வுகளை முன் அறிவித்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கிறது (மத்தேயு 20:19).
இயேசு முன் அறிவித்ததைப் போலவே அவை நடந்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்தி
ருக்கின்றன (மத்தேயு 27- 28; மாற்கு 15,16; லூக்கா 23,24; யோவான் 19- 21)
பாவமில்லாத இயேசு கொல்லப்படுவதற்காக தன்னைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் நண்பனுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட பெரிய அன்பு வேறு இல்லை என்று இயேசு சொன்னார் (யோவான் 15:13).
தனது தீர்க்கதரிசி தவறாக நடத்தப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் தேவன் ஏன் அனுமதித்தார்? நமக்காக தியாக பலியாக இயேசுவை அனுப்புமளவுக்கு அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 சொல்கிறது.
இயேசு நமது பாவங்களுக்காக பலியானார்
இயேசு நமக்காக தன்னுடைய உயிரை ஏன் தியாகம் செய்யவேண்டும்? இது தான் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஆகும்.
நம்முடைய தீயச் செயல்களை விட நல்ல செயல்கள் அதிகமாக உள்ளனவா இல்லையா என்பதைப்பார்த்து அல்லா நியாயம் தீர்ப்பார் என்று இஸ்லாம் போதிக்கிறது.
தீய செயல்களை விட நற்செயல்களைச் அதிகமாக செய்ய வாய்ப்பு உண்டு என்றாலும் கூட, ஒரே ஒரு பாவத்தை செய்தவனைக் கூட பரலோகத்தில் அனுமதிக்க தேவனால் முடியாது.
அவர் அவ்வளவு பரிசுத்தமானவராக இருக்கிறார் (யாக்கோபு2:10)பூரணமற்ற எதையும் பரிசுத்த தேவனால் பரலோகத்தில் அனுமதிக்கமுடியாது. நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் அதனால் நாம் பரலோகத்திற்குள் நுழையமுடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார்.
நாம் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி பூரணமான ஒருவர் நமக்குப் பதிலாக மரித்து நமது பாவக்கடன்களை செலுத்தி தீர்ப்பதே என்பதை தேவன் அறிந்த்திருந்தார். தன்னால் மாத்திரமே அப்படிப்பட்ட மாபெரும் கிரயத்தை செலுத்த முடியும் என்பதை தேவன் அறிந்திருந்தார்.
நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டம்
ஆகவே, தேவன் ஒரு கன்னியிடம் பிறக்கும்படி தமது மகனை அனுப்பினார். தேவன் மரியாளுடன் பெற்றோர்களுக்குரிய உறவு வைத்திருì¸Å¢ø¨Ä. தேவனுடனான அவருடைய உறவு மற்றும் அவருடைய தெய்வீகத்தின் அடிப்படையில், இயேசு தேவகுமாரன் ஆவார்(யோவான் 1:1,14).
தனது பாவமற்ற வாழ்க்கை, பரிபூரண செய்தி, பாவத்துக்காக மரணம் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் போன்றவற்றால் இயேசு தன்னை தேவகுமாரன் என்று நிரூபித்தார்.
இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மரணம் ஆகியவை உங்களுக்கு தரும் செய்தி என்ன? பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இயேசுவை தங்கள் இரட்சகராக நம்புபவர்களுக்கு பாவத்திலிருந்த்து மீட்பை தேவன் அருளுகிறார்.
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் (தேவன்) பிதாவினிடத்தில் வரான்". என்று இயேசு சொன்னார்.
தேவனிடம் செல்லும் ஒரே வழி நானே என்பதை இயேசு தெளிவாக போதித்தார். இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பரலோகம் சென்றடைய முடியும். தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவருக்காக வாழ உதவி செய்வார்.
அத்துடன் நித்திய வாழ்வையும் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசை நாம் எப்படி வேண்டாமென தள்ளிவிட முடியும்? தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுக்குமளவுக்கு நம்மை அன்பு செய்த தேவனை எப்படி ஏற்றுக் கொள்ளாதிருக்க முடியும்?
ஒரு கிறிஸ்தவனாக மாறுதல்
சத்தியத்தைக் குறித்த உறுதி இல்லாதவர்களாக நீங்கள் இருந்தால், பின்வரும் ஜெபத்தை தேவனிடம் கூறுங்கள்: "தேவனே, தயவுசெய்து எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும். தவறாக இருப்பதை கண்டுகொண்டு அதை தள்ளிவிட உதவும். இரட்சிப்புக்கான சரியான வழிக்கு நேராக என்னை நடத்தும்." இப்படிப்பட்ட ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பார்.
இயேசுவை உங்கள் இரட்சகராக நம்பும்படிக்கும், அவரைப் பின்பற்றவும் தேவன் உங்களை நடத்துவாரெனில், இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பை தேவனிடம் கேளுங்கள்.. இங்கே ஒரு மாதிரி ஜெபம் தரப்பட்டிருக்கிறது.
" தேவனே, நான் எனது பாவத்தை நேசிப்பதையும், எனது சொந்தக் கிரியைகளின் மூலம் சொர்க்கத்திற்கு சென்றடைய முயற்சிப்பதையும் விட்டுவிடுகிறேன். எனது பாவங்களுக்காக மரிக்கும்படி இயேசுகிறிஸ்துவை அனுப்பினதற்காகவும், அவரை மரித்தோரிலிருந்த்து உயிரோடெழுப்பினதற்காகவும் நன்றி.
இயேசுவை நான் எனது சொந்த இரட்சகராக நம்புகிறேன். ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன், என்னை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்!"
நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா?
திங்கள், 26 அக்டோபர், 2009
மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி?
மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி?
கேள்வி: மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி?
பதில்: ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு) மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று அப்போஸ்தலர் 13:38 சொல்கிறது
மன்னிப்பு என்றால் என்ன? அது எனக்கு அவசியமானதாக இருப்பது ஏன்?
மன்னிப்பு என்ற வார்த்தை கடந்தகால தவறுகளை மறந்து புதிய காரியங்களைச் செய்ய ஆரம்பித்தல், மன்னித்தல், கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
எவரிடமாவது நாம் தவறு இழைத்திருந்தால் அவருடனான நல் உறவில் நிலைத்திருக்க அவரிடம் மன்னிப்பு எதிர்பார்க்கிறோம்.
ஒரு நபர் மன்னிக்கப்படத்தக்கவர் என்பதினால் மன்னிப்பு கொடுக்கப்படுவதில்லை எவரும் மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் அல்ல. மன்னிப்பு என்பது அன்பு இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும்.
மன்னிப்பு என்பது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்திக் கொள்ளாதிருக்கும்படி எடுக்கும் ஒரு தீர்மானம் ஆகும்.
நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம்.
"ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 அறிவிக்கிறது. "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 கூறுகிறது.
அடிப்படையில் எந்த ஒரு பாவமும் தேவனுக்கு விரோதமான செயலாயிருக்கிறது (சங்கீதம் 51:4). இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிக அவசியமானதாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையெனில், நாம் நமது பாவங்களின் விளைவு களினால் வேதனைப்பட்டுக்கொண்டு நமது நித்தியத்தன் கழிபோம் (மத்தேயு 25:46, யோவான் 3:36).
மன்னிப்பு - நான் பெறுவது எப்படி?
தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2பேதுரு 3:9 சொல்கிறது.
தேவன் நம்மை மன்னிக்க விரும்புகிறார். ஆகவே நம் மன்னிப்புக்கு தேவையானவற்றை அவர் அளித்தார்.
நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 அறிவிக்கிறது. நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக ஒரு மனிதனானார்(யோவான் 1:1,14).
நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 நமக்கு போதிக்கிறது.
அமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். தேவனைப் பொறுத்தவரையில், முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது.
"நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 அறிவிக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தது, பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை அறிவிக்கிறது 1கொரிந்தியர் 15:1௨8.
தேவனுக்குக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் என்று ரோமர் 6:23 கூறுவது உண்மையானதாக இருக்கிறது.
உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? மீள முடியாத படித்தோன்றும் குற்ற மனப்பான்மையான் நீங்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருக் கிறீர்களா?
இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவர் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வைத்தால் உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.
"அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" என்று எபேசியர் 1:7 கூறுகிறது.
இயேசு நமக்காக கடனை செலுத்தி தீர்த்தார், ஆகவே நாம் மன்னிக்கப்பட முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு மனீப்பை அருளும்படி இயேசு மரித்தார் என்பதை விசுவாசித்து, இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
அப்போது அவர் உங்களை மன்னிப்பார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் " என்கிற அற்புதமான செய்தியை யோவான் 3:16,17 உள்ளடக்கியிருக்கிறது.
மன்னிப்பு - உண்மையாகவே சுலபமானதா?
ஆம்! மன்னிப்பு சுலபமானதே! நீங்கள் தேவனிடமிருந்து மன்னிப்பை சம்பாதிக்க முடியாது. தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறும்படிக்கு உங்களால் கிரயம் செலுத்தவும் முடியாது.
தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி இங்கு ஒரு ஜெபம் தரப்பட்டிருக்கிறது.
இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை அருளுகிறது.
இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே.
"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக் குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார்.
இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"
நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா?
கேள்வி: மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி?
பதில்: ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு) மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று அப்போஸ்தலர் 13:38 சொல்கிறது
மன்னிப்பு என்றால் என்ன? அது எனக்கு அவசியமானதாக இருப்பது ஏன்?
மன்னிப்பு என்ற வார்த்தை கடந்தகால தவறுகளை மறந்து புதிய காரியங்களைச் செய்ய ஆரம்பித்தல், மன்னித்தல், கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
எவரிடமாவது நாம் தவறு இழைத்திருந்தால் அவருடனான நல் உறவில் நிலைத்திருக்க அவரிடம் மன்னிப்பு எதிர்பார்க்கிறோம்.
ஒரு நபர் மன்னிக்கப்படத்தக்கவர் என்பதினால் மன்னிப்பு கொடுக்கப்படுவதில்லை எவரும் மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் அல்ல. மன்னிப்பு என்பது அன்பு இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும்.
மன்னிப்பு என்பது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்திக் கொள்ளாதிருக்கும்படி எடுக்கும் ஒரு தீர்மானம் ஆகும்.
நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம்.
"ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 அறிவிக்கிறது. "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 கூறுகிறது.
அடிப்படையில் எந்த ஒரு பாவமும் தேவனுக்கு விரோதமான செயலாயிருக்கிறது (சங்கீதம் 51:4). இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிக அவசியமானதாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையெனில், நாம் நமது பாவங்களின் விளைவு களினால் வேதனைப்பட்டுக்கொண்டு நமது நித்தியத்தன் கழிபோம் (மத்தேயு 25:46, யோவான் 3:36).
மன்னிப்பு - நான் பெறுவது எப்படி?
தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2பேதுரு 3:9 சொல்கிறது.
தேவன் நம்மை மன்னிக்க விரும்புகிறார். ஆகவே நம் மன்னிப்புக்கு தேவையானவற்றை அவர் அளித்தார்.
நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 அறிவிக்கிறது. நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக ஒரு மனிதனானார்(யோவான் 1:1,14).
நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 நமக்கு போதிக்கிறது.
அமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். தேவனைப் பொறுத்தவரையில், முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது.
"நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 அறிவிக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தது, பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை அறிவிக்கிறது 1கொரிந்தியர் 15:1௨8.
தேவனுக்குக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் என்று ரோமர் 6:23 கூறுவது உண்மையானதாக இருக்கிறது.
உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? மீள முடியாத படித்தோன்றும் குற்ற மனப்பான்மையான் நீங்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருக் கிறீர்களா?
இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவர் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வைத்தால் உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.
"அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" என்று எபேசியர் 1:7 கூறுகிறது.
இயேசு நமக்காக கடனை செலுத்தி தீர்த்தார், ஆகவே நாம் மன்னிக்கப்பட முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு மனீப்பை அருளும்படி இயேசு மரித்தார் என்பதை விசுவாசித்து, இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
அப்போது அவர் உங்களை மன்னிப்பார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் " என்கிற அற்புதமான செய்தியை யோவான் 3:16,17 உள்ளடக்கியிருக்கிறது.
மன்னிப்பு - உண்மையாகவே சுலபமானதா?
ஆம்! மன்னிப்பு சுலபமானதே! நீங்கள் தேவனிடமிருந்து மன்னிப்பை சம்பாதிக்க முடியாது. தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறும்படிக்கு உங்களால் கிரயம் செலுத்தவும் முடியாது.
தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி இங்கு ஒரு ஜெபம் தரப்பட்டிருக்கிறது.
இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை அருளுகிறது.
இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே.
"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக் குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார்.
இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"
நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)